யாழில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்துறை, நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை சிகிச்சை பலனின்றி
கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருந்த நிலையில் காணாமல்போன குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது உடனே குழந்தை மீட்கப்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளது.