சிறையில் பொடி லெசியின் அறையிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் நேற்று (08.11.2024) வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொலைபேசி உதிரிப்பாகங்கள்
இதன்போது, 'பொடி லெசி'யின் சிறைக் கூண்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டை, டேட்டா கேபிள், ஹெட்செட் மற்றும் பல்வேறு தொலைபேசி உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
