இலங்கையர்களால் இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damano Francovigti இதனைத் தெரிவித்துள்ளார்.
மொழி மற்றும் தொழில்முறை அறிவுடன் இத்தாலிக்கு வந்து தொழில் பெறுவதன் மூலம், இலங்கையர்களை பாதுகாக்கப்படுவதற்கும் நேரடியாக வேலை வாய்ப்புகளை தேடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலவணி
இத்தாலியில் தாபோன் நகர சபையின் ஆளுநர் ரவேந்தா ஜெகநாதனின் தலையீட்டால், டொன் போஸ்கோ நிறுவனத்தில் தற்போது மூன்று துறைகளில் பயிற்சி பெற்று வரும் தொழிலாளர்கள் குழுவை முதல் முறையாக இத்தாலிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அந்நிய செலவணியாக டொலரை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும் என தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam