ஆளுநரை சந்தித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள வேழமாலிகிதன்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருடன் வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பாக தனது நிலைப்பாட்டையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன் என்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை குறிப்பிட்டார்.
விளக்க கடிதம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருடன் வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பாக கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மேலும், தமிழரசுக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ. வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
