எரிபொருள் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று பணம் வழங்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒரு வருட காலத்துக்குத் தேவையான விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் பணம் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தள்ளார்.
எனவே இம்மாதம் 12ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது விமான எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri