ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி! யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஏமன் நாட்டின் மீது விமானங்கள் வாயிலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரை மேலும் நீட்டிக்கவும், காசா முனை மீதான தாக்குதலை தொடரவும், இஸ்ரேல் அமைச்சரவை தங்கள் நாட்டு இராணுவத்துக்கு சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஈரான் நாட்டின் ஆதரவில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் நாட்டின், பென் - குரியான் சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
பதிலடி தாக்குதல்
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம், ஏமன் நாட்டின் மீது விமானங்கள் வாயிலாக நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், அந்நாட்டின் செங்கடல் பகுதியில் உள்ள முக்கிய துறைமுகமான ஹோடெய்டா மற்றும் அங்கிருந்து, 55 கி.மீ., தொலைவில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை சேதமடைந்தன.
இதில், ஒருவர் கொல்லப்பட்டதோடு, 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இன்னும் சிலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
