அமெரிக்காவை பலி தீர்க்க கட்டாரை ஈரான் தாக்கியதற்கான காரணம் இதுதான்!
இஸ்ரேலை தாக்குவதை விட, அமெரிக்காவை தாக்குவது எமக்கு மிகவும் இலகுவான விடயம் என ஈரான் முன்னதாக அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த இரு வாரங்களாக நடைபெறும் ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா களமிறங்கி, ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் முதலில் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்ததுடன் கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இதுவரையில் முழுமையான போர் நிறுத்தம் குறித்த எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளிவரவில்லை.
ஈரான், அமெரிக்காவை பலி தீர்க்க கட்டாரை ஏன் தாக்கியது? அமெரிக்காவின் எந்தெந்த முக்கிய தளங்கள் தாக்கப்பட்டன? அதனால் எவ்வாறான நிகழ்வுகள் அரங்கேறலாம் என்பதை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்..,