கட்டாரை தாக்கிய ஈரான்.. பிரான்ஸ் கட்டாருக்கு ஆதரவு
கட்டார் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கட்டாருக்கு ஆதவவை வெளிப்படுத்தியுள்ளார்.
"அனைத்து தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பவும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
அதிகரிக்கும் குழப்பநிலை
இந்தக் குழப்பம் முடிவுக்கு வர வேண்டும்" என்று மக்ரோன் ஒரு சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ஈரானிய இலக்குகளைத் தாக்கத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டன.
J’exprime la solidarité de la France au Qatar frappé par l’Iran sur son sol.
— Emmanuel Macron (@EmmanuelMacron) June 23, 2025
Je suis en contact étroit avec les autorités du pays et nos partenaires de la région.
J’appelle toutes les parties à la plus grande retenue, à la désescalade et au retour à la table des négociations.…
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசுவதற்கு ஒரு நாள் முன்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பிரித்தானிய சகாக்களை சந்தித்து பேசியிருந்தார்.
