ஈரானின் திடீர் திருப்பம்! முடிவை மாற்றிய அமெரிக்கா
எதிர்வரும் காலங்களில் வரும் போர்களில் எந்த தரப்பும் வெல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை ஈரான்-இஸ்ரேல் போர் எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த போரில் ஈரான் தனியாக செயற்பட்டது என்று கூற முடியாது, அவர்களுக்கு பின்னால் சீனா, ரஸ்யா, வடகொரியா இருந்தார்கள்.
ஈரானுக்குள் மொசாட் உறுப்பினர்கள் நுழைந்துள்ளதாலும் இந்த போரை நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் ஈரானுக்கும் இருந்தது.
இவர்களால் 12 நாட்களுக்கு மேல் போரை முன்னெடுத்து செல்ல முடியவில்லை” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...