திடீரென தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் : காசாவில் தொடர்ந்து கேட்கும் துப்பாக்கிச் சத்தங்கள்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நள்ளிரவு நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சத்தங்கள்
மேலும், மருத்துவமனைக்குள் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் என பிபிசியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |