மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல்
மத்திய காசாவின் டேர் அல்-பலாஹ் பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 12 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம், வடக்கு காசாவின் ஷெஜையா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்கு காசாவின் ரபா, மத்திய காசா ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று செய்தி வெளியிட்டது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமான இந்த யுத்தத்தில் இதுவரை காசாவில் 37,925 பேர் பலியாகியிருப்பதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri