இலங்கையில் பகுதி பகுதியாக பல பிரதேசங்கள் முடக்கம்
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் முழுமையாக முடக்கப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அதிக தொற்றாளர்கள் பதிவாகும் பிரதேசங்கள் தற்போது பகுதி பகுதியாக முடக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதையும் முடக்குவது பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துமெனவும், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை தோன்றுமெனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூறிவரும் நிலையிலும் பகுதி பகுதியாக சில பிரதேசங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை கோவிட் தொற்று அதிகரிக்கும் பகுதிகள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றிய நிலையில் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,