இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி கைது
கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தக் குற்றத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது.
கொலை
ஒரு கொலை குறித்து அறிந்திருந்தும், அது குறித்த தகவலை மறைத்து, குற்றத்திற்கு உதவியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தக் குற்றத்துடன் தொடர்புடையதாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri