செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Nepal
By Dhayani Oct 15, 2025 07:57 AM GMT
Report

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிவரலாம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிக்கும் பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இரகசிய விசாரணையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இரகசிய விசாரணையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி: அமைச்சர் வெளியிட்ட தகவல்

  

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு   

இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் இன்று நாடு கடத்தப்பட உள்ளதுடன்,செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஷாரா குழு!

நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஷாரா குழு!

இதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்தேகநபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

செவ்வந்தியுடன் சிக்கிய ஜேகே பாய் உள்ளிட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகின..!

செவ்வந்தியுடன் சிக்கிய ஜேகே பாய் உள்ளிட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகின..!

ஜே.கே. பாய் எனும் நபரின் உதவி  

இஷாரா மற்றும் அந்த பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்றைய இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல் | Isara Sewanthi Arrested Nepal  

இவர்கள் நேபாளத்தில் காத்மாண்டு பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டில் அதிக வாடகை கொடுத்து மறைந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்பின்னர், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருப்பது தெரியவந்தது.

சட்ட புத்தகத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட பெண் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டார்.

குற்றத்தைச்செய்த பிறகு, இஷாரா செவ்வந்தி மித்தெனியா பகுதியிலிருந்து ஜே.கே. பாய் எனும் நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வந்தியின் திட்டம் 

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை கனேமுல்லே சஞ்சீவாவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல் | Isara Sewanthi Arrested Nepal

இதன்போது கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தகொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது. கெஹல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சந்தேகநபர்களிடம் விசாரித்தபோது, ​​இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளமை கண்டுபடிக்கப்பட்டுள்ளது. 

தப்புவதற்கு முன் சிம் அட்டையை துண்டித்த செவ்வந்தி..! விரைவில் முக்கிய புள்ளிகள் கைது

தப்புவதற்கு முன் சிம் அட்டையை துண்டித்த செவ்வந்தி..! விரைவில் முக்கிய புள்ளிகள் கைது

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US