நிதியமைச்சர் பொதுத் தேர்தலுக்கு தயாராகின்றாரா?
பொதுத் தேர்தலுக்காக கட்சியை தயார்ப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்றைய தினம் அனைத்து பிரதேச சபைத் தலைவர்களை அழைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் அலரி மாளிகையில் இன்று மதியம் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகையான நிதி, பிரதேச சபைகளின் தலைவர்களிடம் கையளிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
வழங்கப்படும் இந்த நிதியை ஆண்டு முடிவுக்குள் கிராமங்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்துமாறு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் தேர்தலை இலக்கு வைத்தே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் மற்றும் கிராம அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.