இலக்கு வைக்கப்படுகின்றாரா மன்னாரின் புதிய ஆயர்! சுற்றிவளைக்கும் அரசியல் நெருக்கடிகள்
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஆயர் அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மீது தற்போது பல அழுத்தங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு காரணமானவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதை தான் எதிர்ப்பதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருமாறு மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கோரியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து மன்னார்ஆயர் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்பட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam