ரூபாவின் பெறுமதி உயர்வு! பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக பல பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இரும்பு விலை மாற்றம்
இதற்கமைய இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதிக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான காரணம் என மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேயிலை விலை
டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால் தேயிலையின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தேயிலைத் தோட்டக் கம்பனிகளும் நட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் தேயிலை ஒரு கிலோ 1800-1900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை அதிகபட்சமாக 800-900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேயிலைக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan