பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த ஈரானிய படகு
பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த ஈரானிய படகு ஒன்று இந்தியாவின் குஜராத்தில் கைப்பற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஒஃப் இந்தியாவின் தகவல்படி, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு, கிடைத்த இரகசிய தகவலில், ஈரானில் உள்ள துறைமுகத்திலிருந்து படகு ஒன்று புறப்பட்டு இலங்கையை நோக்கிச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சில காரணங்களுக்காக, குறித்த படகு இலங்கையின் கடலுக்குள் செல்ல முடியவில்லை. மாறாக இந்தியக் கடற்பரப்பை நோக்கிச் சென்றது. இதன்போதே இந்திய அதிகாரிகளால் அது கைப்பற்றப்பட்டது.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இந்த படகிலிருந்து 30 முதல் 50 கிலோ வரை மதிப்பிடப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
எனினும் இன்னும் அதன் சந்தை மதிப்பு அறிவிக்கப்படவில்லை.
சம்பவத்தின் போது படகிலிருந்த ஈரானிய பிரஜைகளான ஏழு பணியாளர்களும் கைது செய்யப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.