உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்பது குறித்து வெளியான தகவல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை.
பங்கேற்பதற்கான வாய்ப்பு
எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை.

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.
இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam