ஈரானுக்கு எதிராக ஸ்மாட் அணு ஆயுத தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜுனியர் ஜார்ஜ் வாக்கர் புஷ் (george walker bush) ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்த ஸ்மாட் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.
அது தொடர்பான ஆவணங்களும் இருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரை அடுத்து வெளிவரும் பல தகவல்களை அடுத்து இந்து செய்தியும் வெளியிடப்பட்டுள்ளன.
பராக் ஒபாமாவின் உடன்படிக்கை
ஜனாதிபதி ஜுனியர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பதவிக்கு பின்னர் ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் ஆட்சி காலத்தின் இறுதியில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு இராஜதந்திர தீர்வை முன் வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
அதன் இறுதியில் இரு நாடும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தது.2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஒஸ்ரியா நாட்டின் வியாணா நகரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.ஒப்பந்தத்தில் ஆறு தரப்பினர் உள்ளனர்.
அதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.பைவ் பி பிளஸ் ஒன் 2015 Joint Comprehensive Plan of Action (JCPOA) உலகத்தில் பலம் வாய்ந்த ஐந்து நாடுகள் ரஷ்யா சீனா, பிரான்ஸ் ,பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பிளஸ் ஒன் தான் ஜேர்மன் ஆகும்.

ஜேர்மனியிடம் அணு ஆயுதங்கள் கிடையாது. ஆனால் உடன்படிக்கையில் இணைந்து கொண்டிருந்த நாடாகும். குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கடைபிடிப்பதாக ஈரான் ஒப்புக் கொண்டது.
அமெரிக்காவும் படிப்படியாக ஈரானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்குவதாக தெரிவித்திருந்தது.
ஆனால் முதல் ஆட்சிக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் 2008 ஆம் ஆண்டு குறித்த ஒப்பந்தத்தை தன்னிச்சியாக முறித்துக் கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இந்த போருக்கான அவசியம் இருந்திருக்காது.