கடுமையான விளைவுகளை கொடுப்போம்..! இஸ்ரேலை எச்சரித்த ஈரான்
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா மோதலின் 28 வது நாளில், யாஸ்த் நகரில் உள்ள யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, "கடுமையான விளைவுகளை கொடுப்போம்" என ஈரான் எச்சரித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டலுடன் தொடர்புடைய ஒரு ஆலையைத் தாக்கியதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சுக் கசிவுகளோ ஏற்படவில்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
புஷேர் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு எறிபொருள் விழுந்தது, ஆனால் அது எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்தத் தாக்குதல்கள், கோண்டாப் கனநீர் வளாகம் மற்றும் குசெஸ்தான், இஸ்ஃபஹானில் உள்ள முக்கிய எஃகு ஆலைகளையும் தாக்கிய ஒரு பரந்த தாக்குதல் அலையின் ஒரு பகுதியாகும்.
அணுசக்தி மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கண்டித்ததோடு, வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri