இஸ்ரேலின் தீவிர தாக்குதல்! ஈரானின் முக்கிய அதிகாரிகள் பலி
தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக மேலும் இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலுட், ஈரான் காவல் படையில் உளவுத்துறை துணைத் தலைவராக இருந்த அலிரேசா லோட்ஃபி, இவ்வாறு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தனித்தனியாக, புரட்சிகர காவல்படை (IRGC)யின் கீழ் செயல்படும் துணை இராணுவ உளவுத்துறை பாதுகாப்புத் தலைவர் முகமது தாகி யூசெப்வந்தும் இதன்போது கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய இராணுவ நடவடிக்கை
இந்நிலையில் தெஹ்ரானில், இஸ்ரேலின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் பலவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய இராணுவம் "தெஹ்ரான் அருகே ஒரு ரேடார் நிறுவலை அழித்ததாக" அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல்கள் என இஸ்ரேல் விவரித்தது.
எனினும் ட்ரம்புடனான உரையாடலைத் தொடர்ந்து, நெதன்யாகு மேலும் தாக்குதல்களில் இருந்து விலகிவிட்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்பில், ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் அது போரின் அனைத்து நோக்கங்களையும் அடைந்துவிட்டதாகக் கூறியதாகவும் போர்நிறுத்தத்தின் ஸ்திரத்தன்மையில் அவர் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.