போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்! மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலைத் தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுவதாகவும் மக்கள் முகாம்களுக்குள் சென்று மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பு முடித்துக்கொண்டால் மாத்திரமே ஈரான் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் செயத் அபாஸ் அராக்சி தெரிவித்திருந்தார்.
வலுவான பதிலடி
இதனையடுத்தே, இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் இந்த போர்நிறுத்த மீறலுக்கு வலுவான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக அதிக தீவிரம் கொண்ட தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய இராணுவத்தினரை அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த சில மணிநேரங்களில் இஸ்ரேலை நோக்கி எந்த ஏவுகணைகளையும் வீசவில்லை என்று ஈரானின் ஆயுதப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |