நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை
அமெரிக்காவுடன் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் நிச்சயமற்ற நிலையினைத் தொடர்ந்து, வளைகுடா அண்டை நாடுகள் வாஷிங்டனுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் துணைத் தலைவர் எஸ்மாயில் சாகாப் எஸ்ஃபஹானி, ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் தடையை முன்னிட்டு, ஈரானின் அடிப்படை வசதிகள், குறிப்பாக எண்ணெய் கிணறுகள் குறிவைக்கப்பட்டால், அதற்கு நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் - அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்பில் உலகம்! ஈரான் முன்மொழிந்துள்ள மூன்று கட்டத் திட்டம்
ட்ரம்பின் அழுத்த அரசியல்
எங்கள் மீது எவ்வித போர்த் தாக்குதலும் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும். எங்கள் எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சேதமடைந்தால், தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் நான்கு மடங்கு சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும், என்று அவர் X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்களுக்கு கணக்கிடும் முறை வேறுபட்டது. ஒரு எண்ணெய் கிணறு சேதமடைந்தால், அதற்குப் பதிலாக நான்கு எண்ணெய் கிணறுகள் சேதப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்த எச்சரிக்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் அழுத்தத்தை அதிகரிப்பதாக கூறியதையடுத்து வெளியாகியுள்ளது.

அவர் தனது Truth Social தளத்தில், “ஈரான் பொருளாதார ரீதியாக சரிந்து வருகிறது. அவர்கள் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க விரும்புகின்றனர். தினமும் 500 மில்லியன் டொலர் இழப்பை சந்திக்கின்றனர், என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், Fox News-க்கு அளித்த பேட்டியில், இந்த அழுத்தம் தொடர்ந்தால் ஈரானின் எண்ணெய் குழாய்கள் சில நாட்களில் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் பதில்
இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்து, ஈரானுக்கு மேலாதிக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.
அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “அவர்கள் தங்களிடம் ‘கார்டுகள்’ உள்ளதாக பெருமை பேசுகின்றனர்.

ஆனால் நிஜத்தில், வழங்கல் (supply) மற்றும் தேவை (demand) சமமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். அவரது விளக்கப்படி, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
அதேவேளை, பாப் எல்-மண்டெப் நீரிணை மற்றும் எண்ணெய் குழாய்கள் இன்னும் பயன்படுத்தப்படாத ‘வழங்கல் ஆயுதங்கள்’ என அவர் கூறினார்.
மேலும், அமெரிக்கா தன் பங்காக எண்ணெய் சேமிப்புகளை வெளியிடுவது மற்றும் அதிக விலையால் தேவையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி
உச்ச கட்ட பதற்றம்
கோடை காலம் எண்ணெய் தேவைக்கு உச்சமாக இருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.

இதனால், அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சிகள் அனைத்தும், ஈரான் – அமெரிக்கா மோதல் மேலும் தீவிரமடைந்து, உலகளாவிய ஆற்றல் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam