இறம்பொடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயம்
நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்ற மூவர் காணாமற்போயுள்ளனர்.
காணாமல்போன மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
நுவரெலியாவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று (12) பிற்பகல் றம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்தமையினால், 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
றம்பொடை நீர்வீழ்ச்சியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று பெய்த கனமழை காரணமாக ரம்பொட நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
