ஐ.பி.எல் போட்டிகளின் எஞ்சியப் போட்டிகள் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்த தீர்மானம்
2021 ஐ.பி.எல் போட்டிகளின் எஞ்சியப் போட்டிகளை எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் சபை இன்று நடத்திய பொதுச்சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2021 ஒக்டோபர் முதல் நவம்பர் வரை நடத்தப்படவுள்ள சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் ஆண்களுக்கான 20க்கு 20 உலகக் கிண்ணப்போட்டிகளின் அட்டவணையை நீடிக்கக்கோரும் யோசனை ஒன்றை முன்வைக்கவும் இந்திய கிரிக்கட் சபை முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் ஆரம்பமான ஐ.பி.எல் போட்டிகள் வீரர்கள் மத்தியில் கோவிட் தொற்று பரவியதன் காரணமாக இடையில் ஒத்திவைக்கப்பட்டன.