பிரான்ஸில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு
புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்காக நடாத்தப்படும் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட குழு விவாதத்தில் உரையாற்றுவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு தொடர்பான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (14.06.2023) உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த உச்சி மாநாடானது இம்மாதம் ஜூன் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் அழைப்பின் பேரில், உச்சி மாநாட்டில் உலக அரச தலைவர்கள், முக்கிய சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், உலகளாவிய நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணையுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பு
வறுமை, காலநிலை மாற்றம் மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிரான போராட்டம், பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளல், நியாயமான மற்றும் ஒற்றுமை அடிப்படையிலான ஒரு புதிய நிதி அமைப்புக்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த உச்சிமாநாட்டின் பிரதான குறிக்கோளாக கருதப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் பாரிஸில் உள்ள பாலைஸ் ப்ரோங்னியார்ட் அரங்கில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, 2023 இன் பிற்பகுதியில் நடைபெறும் பல சர்வதேச கூட்டங்களின் பிரதான அடித்தளமாக கருதப்படுகிறது.
இதில் இந்திய ஜனாதிபதியின் கீழ் G20 உச்சிமாநாடு, உலக வங்கி மற்றும் IMF வருடாந்திர கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இதற்கமைய பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் பிரான்ஸ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
