பொதுத் தேர்தல் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அடுத்த நகர்வு
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
இதன்படி, 8 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான தேர்தல்
மேலும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த மதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் பல நாடுகளை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri