சுதந்திர தின நிகழ்விற்கு 3250 அதிதிகளுக்கு அழைப்பு: சஜித் மற்றும் அநுர புறக்கணிப்பு
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 3250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் உள்ளடங்குகின்றனர்.
75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித், அநுர தரப்பின் குற்றச்சாட்டு
அதிக பணம் செலவழித்து இந்த நிகழ்வை நடத்துவதே இதற்குப் பிரதான காரணம் என்று சஜித் தரப்பும், அநுர தரப்பும் கூறியுள்ளன.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவாரிக்கே வன்னியலதோ கோடரியுடன் இந்த நிகழ்வில்
கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.