சிறுத்தை ஒன்றின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை
மாத்தளையில் சிறுத்தை ஒன்றின் கொலையில் மூன்றாம் தரப்பின் தொடர்பு குறித்து வனவிலங்கு பாதுகாப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
மாத்தளை- ஓவாலா பகுதியில் உள்ள ஒரு தானியங்கி மின் நிலையத்தின் தொட்டியில் இருந்து இறந்தநிலையில் சிறுத்தை ஒன்று உடலமாக மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் இந்த சிறுத்தையின் உடலில் விஷம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.சி.டி.வி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மின்சார நிலையத்தின் இரண்டு ஊழியர்கள் உட்பட நான்கு பேர் நிபந்தனை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கடந்த ஒரு வருடத்திற்குள் மாத்தளை மாவட்டத்தில் கொல்லப்பட்ட இரண்டாவது சிறுத்தை இதுவாகும்.
இதற்கிடையில் இந்த சிறுத்தை அதன் தோல் மற்றும் பற்களுக்காக கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam