உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை முழுமைப்படுத்தப்படவில்லை! - சட்டமா அதிபர்
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் விசாரணைகள் மற்றும் தகவல்கள் முழுமைப்படுத்தப்படவில்லை என்று சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா காவல்துறை அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
எனவே 2019,ஏப்ரல் 21 அன்று நடந்த தாக்குதல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் காவல்துறை அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக அறிக்கைகள் மற்றும் சாட்சிகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் காவல்துறை அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் தமது ஆலோசனையைப் பின்பற்றி அனைத்து பரிந்துரைகளையும் 14 நாட்களுக்குள் தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா காவல்துறை அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam