தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனை கட்டாயமாக்குவது குறித்த சட்டங்கள் அறிமுகம்
கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை கட்டாயமாக்குவது குறித்த சட்டங்கள் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களை கண்டறியும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கணக்கெடுப்பு நடாத்தப்படுவதாகவும், சட்ட உருவாக்கத்திற்கான அடிப்படையாகவே இந்த கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடாத்துமாறு ஜனாதிபதி அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
பல்வேறு காரணிகளினால் சிலர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை கட்டாயமாக்கும் வகையில் ஒர் சட்டத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam