வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்ப இலகு வழி! - புதிய செயலி அறிமுகம்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
LANKA REMIT என்ற செயலியே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LANKA REMIT தேசிய கையடக்கத் தொலைபேசி செயலி இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த LANKA REMIT செயலியின் மூலம் நீங்கள் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும்.
இது இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தால், பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதன் அவசியத்தையும், முறைசார் நடைமுறைகளை ஊக்கப்படுத்துவதையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
