ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.09.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கப்போகும் அறிவிப்பு: பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் குறித்து லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான தகவல்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.
சர்வதேச விசாரணை
அரசாங்கமே இந்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். எனவே சனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சர்வதேச விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என அரசாங்க அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இன்றைய தினம் கூறியதாகவும், இந்த கூற்றின் மூலம் அவர் கர்தினாலை இழிவுப்படுத்தி உள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
