அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேர், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 3ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது, மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப மற்றும் கோசல அங்சமாலி, முன்னிலை சோசலிசக் கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
