வலம்புரிச்சங்கு இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலம்புரிச் சங்கு இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று(8) உத்தரவிட்டுள்ளார்.
தாரீக் வீதி,நெய்தல் நகர் மூதூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையிலே மூதூர் - கட்டைபறிச்சான் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இராணுவப் புலனாய்வாளர்கள் வலன்புரிச் சங்குகளுடன் சந்தேக நபரை கைது மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை பொலிஸர் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



