நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!
நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்மை காத்து வழிநடத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இன்று (08.03.2026) பல பகுதிகளில் முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில் மகளிர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் மங்கள விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகியும் நடிகையுமான பார்வதி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.
மேலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
ஹந்தானை
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும், ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஹந்தானை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் "வீர வனிதையர்" விருது பெற்ற திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம், பிரதம இணைப்பாளர் பி. ஸ்ரீ காந்த் ஆகியோர் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வை 25 இற்கும் மேற்பட்ட தொழிலாளர் அமைப்பு பெண்களும், தோட்டப் பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மேலதிக தகவல் - ராகேஷ்
கிளிநொச்சி
பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி கணேஸ்குமார் கிறேஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் சைவமங்கையர் கழகத்தை சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியர் சோமசேகரம்பிள்ளை செல்வராணி, கரைச்சி வட்டக்கச்சி பிறப்பு, இறப்பு பதிவாளர் கிருஸ்ணராசா தயாநிதி,பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் குலவீரசிங்கம் குணலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - தேவந்தன்
சிறீதரன் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் சுகந்திர பறவைகள் என்ற தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு இன்று பகல் 10 .00மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஓய்வு நிலை ஆசிரியர் செல்வராணி மற்றும் வளவாளர் கமலினி விநாயகமூர்த்தி மனித உரிமை செயற்பாட்டாளர் விவேகி நிஷாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - சுடரோன்
கொழும்பு
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீரவனிதையர் விருது விழா' மற்றும் சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு நேற்று(07.03.2026) கொழும்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பிரபல தொழிலதிபர் பி.எஸ். செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழகத்திலிருந்து வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, 'தினகரன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், டாக்டர் கனகலட்சுமி மற்றும் காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா, ஆர்.வைத்தியமாநிதி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு 'வீரவனிதையர் விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுநர் ராதாமேத்ராவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழாவின் ஓர் அங்கமாக இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளன. பெண்மையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan