நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!
நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்மை காத்து வழிநடத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இன்று (08.03.2026) பல பகுதிகளில் முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில் மகளிர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் மங்கள விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகியும் நடிகையுமான பார்வதி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.
மேலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam