இலங்கை இராணுவம் மற்றும் அரச ஊழியர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கடும் நிலைப்பாடு - சிரேஷ்ட விரிவுரையாளர் தகவல் (VIDEO)
இலங்கையை பொறுத்தவரையில் யார் எந்த பதவிக்கு வந்தாலும் இதுவரை மத்திய வங்கியின் டொலர் கையிருப்பை அதிகரிக்க கூடிய எந்தவிதமான டொலர் கையிருப்பும் நாட்டிற்கு வரவில்லை என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீண்டு வர இதுவரை இலங்கை எந்தவிதமான காலடியையும் எடுத்து வைக்கவில்லையெனவும், அவை அரச ஊழியர்களின் விடயத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,