டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு! சர்வதேச சந்தையில் தங்க விலையில் பாரிய அதிகரிப்பு
சர்வதேச வர்த்தக பதற்றம் மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் காரணமாக சர்வதேசத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
இதன்படி, சர்வதேசத்தில் நேற்றையதினம் தங்கத்தின் விலை 0.2 வீதம் அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,320.58 டொலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிலும் நேற்று தங்க விலை 0.3 வீதத்தினால் உயர்ந்துள்ளதுடன் வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலர் குறியீடு 0.2 வீதத்தினால் சரிந்துள்ளதாக தெ வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையிட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச பொருளாதார மாற்றங்களினால் கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்க விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
