அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் - விமான நிலையத்தில் கசிந்த உண்மை
இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்களிக்க மக்கள் நாடு திரும்புகிறார்கள் என தகவல்கள் வெளியாகின.
எனினும் அந்தளவு அதிகரிப்பான பயணிகள் இதுவரை வரவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விமானம்
தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri