கொழும்பு விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்!
இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை இம்மாதம் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியா மற்றும் மாலைத்தீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாக மேலும் பல சர்வதேச விமான நிறுவனங்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.