யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! மோடியிடம் விசேட கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமருக்கும் 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கும் இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில் தான் இந்த இந்த வேண்டுகோளை விடுத்ததாக ஜெயசூரிய கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"இந்த சந்திப்பு உண்மையிலேயே மறக்கமுடியாத மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவம்.
மேலும் சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி.
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு முன்மொழியப்பட்டமையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
