சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன்

Human Rights Council United Nations Sivasakthy Ananthan Sri Lanka Politician Sri Lankan political crisis
By Shan Jun 18, 2023 10:37 AM GMT
Report

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவின் 33 ஆவது நினைவு தினம் நாளையதினம் திங்கட்கிழமை (19.06.2023) அனுஷ்டிக்கப்பட உள்ளது.

சிவசக்தி ஆனந்தன் இன்று (18.06.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன் | International Community Save Sivashakti Anandan

இந்திய - இலங்கை ஒப்பந்தம்

எமது செயலாளர் நாயகமும் அவருடன் இணைந்து எமது கட்சியின் பதின்மூன்று தோழர்களும் சர்வதேச சதியின் காரணமாக சென்னையில் படுகொலை செய்யப்பட்டனர்.

தனது இறுதி மூச்சு வரை ஈழ மக்களின் விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு, அதனை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக நின்று, களமாடி, எம்மையும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக வழிநடத்திய தோழர் க.பத்மநாபா.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒன்றே இன்றுவரையில் சர்வதேச ஒப்பந்தமாகத் திகழ்கிறது.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன் | International Community Save Sivashakti Anandan

அதனூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபை முறைமையே இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழர்களுக்கான அதிகாரமாக உள்ளது.

இது போதாதென்பதைத் தெரிந்து கொண்டிருந்த ஈபிஆர்எல்எவ் சர்வதேச நாடொன்று எமது பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்ய நேர்ந்ததை தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதே நேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தமானது ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதாகவும் அமைந்தது.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன் | International Community Save Sivashakti Anandan

ஆயுதப் போராட்டம்

தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தனது கோர முகத்தை தமிழர்கள் மீது காட்டி வருகிறது.

2009 ஆம் ஆண்டு வரை வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கெதிரான ஒவ்வொரு வன்முறையிலும் அவர்களை அங்கு அனுப்பிவிட்டு, இப்பொழுது எமது தாயகப் பிரதேசத்திலிருந்தும் எம்மை விரட்டும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன் | International Community Save Sivashakti Anandan

நாம் இப்பொழுது சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளோம்.

இந்த நிலையில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டுமாக இருந்தால், நாம் எமது குறுகிய கட்சிசார் அரசியல் நலன்களை முன்னிறுத்தாமல், எமது வருங்கால சந்ததி அச்சமின்றி, தமது தாயகப் பிரதேசத்தில் சகல உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமை பல்வேறு காரணங்களுக்காக நாம் தனித்தனி அரசியல் கட்சிகளாக மக்கள் சேவை ஆற்றலாம்.

வெற்றி வரை உறுதியுடன் போராடுவோம்

ஆனால் எமது ஒட்டுமொத்த நோக்கம் அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாமும் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணர்ந்து, எமது இனத்தின் சமத்துவ சகவாழ்விற்காக உழைப்பதாகவே இருக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன் | International Community Save Sivashakti Anandan

எமது செயலாளர் நாயகம் தோழர் க. பத்மநாபா சொன்னதைப் போன்று நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிப்பவர்களா இருக்க வேண்டும்.

அதனடிப்படையில் அவரின் மற்றொரு கூற்றின் படி 'ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றி வரை உறுதியுடன் போராடுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் அனைவரும் ஐக்கியமாக எமது இலட்சியமான தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என்பதை இன்றைய 33 ஆவது தியாகிகள் தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சபதமேற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US