திடீரென நிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து! காரணம் வெளியானது
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்டா மாறுபாடு கிராமப்புறங்களில் பரவும் அதிக ஆபத்து இருப்பதாக கோவிட் கட்டுப்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பேருந்துகள் மற்றும் ரயில்களில் தேவையின்றி பயணிக்கும் மக்கள் மூலம் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ரயில்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது” என அவர் கூறியுள்ளார்.
அண்மையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
