உக்ரைன் பயணங்களை தவிர்க்கவும்! சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான மோதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர கெடு விதித்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் அந்நாட்டு மக்களுக்கு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படவில்லை எனவும், ஆனால் சுவிஸ் மக்கள் உடனடியாக உக்ரைனுக்கான சுவிஸ் தூதரகத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
2020ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 210 சுவிஸ் குடிமக்கள் உக்ரைனில் தங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனில் நிலவும் பதற்றத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் ரஷ்யாவை சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan