புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தாமதமின்றி செல்லுமாறு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
13ஆம் திகதி வரை தங்கள் பிரதேசங்களுக்கு செல்ல காத்திருக்க வேண்டாம் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்குள் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக தாமதமின்றி செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு அதிக மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் உள்ளமையினால் இறுதி நேரத்தில் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிதல் உட்பட அனைத்து சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு புத்தாண்டினை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.