பெண்ணொருவரை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் பரிசோதகர் கைது
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்ணொருவரிடம் இலஞ்சமாக தகாத உறவு கோரியது தொடர்பில் அவர் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று(22.11.2023) பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் இலஞ்சமாக தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை நகரில் மாறுவேடத்தில் வந்துள்ளனர்.
கொழும்புக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள்
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கல்முனையில் உள்ள ஒன்றுக்கு வருமாறு கூறி பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு சென்று விடுதி அறைக்குள் சென்றபோது குறித்த பெண் மலசல கூடத்திற்குள் இருந்து இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்ற கட்டளையைப்பெற்று கொழும்புக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri