முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை! (Photos)
முல்லைத்தீவு - மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் காணப்படும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கை இன்று(17) பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சோதணை நடவடிக்கை
பொதுமக்களின் தொடர் முறைப்பாடுகளிற்கமைவாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மல்லாவி நகரில் அமைந்துள்ள பல்பொருள் வாணிபங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சோதணையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வியாபார நிலையங்களில் காலாவதி திகதி கடந்த உணவுப்பொருட்கள், வண்டு மொய்த்த உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு உருவழிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு இடப்படாத வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கென வெளிக்காட்டி வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு என சான்றுப்பொருட்களாக மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுகாதார நடைமுறையின்றி உணவு பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாளைய தினம் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
