முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை! (Photos)
முல்லைத்தீவு - மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் காணப்படும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கை இன்று(17) பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சோதணை நடவடிக்கை

பொதுமக்களின் தொடர் முறைப்பாடுகளிற்கமைவாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மல்லாவி நகரில் அமைந்துள்ள பல்பொருள் வாணிபங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சோதணையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வியாபார நிலையங்களில் காலாவதி திகதி கடந்த உணவுப்பொருட்கள், வண்டு மொய்த்த உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு உருவழிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு இடப்படாத வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கென வெளிக்காட்டி வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு என சான்றுப்பொருட்களாக மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுகாதார நடைமுறையின்றி உணவு பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாளைய தினம் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri