மோப்ப நாய்களுடன் சோதனையில் இறங்கிய களுவாஞ்சிகுடி பொலிஸார்
மட்டக்களப்பு - பல்முனை பிரதான வீதியின் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நேற்றிரவு (18.01.2024) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோப்பநாய் உதவியுடன் சோதனை
இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளும் மோப்ப நாய்கள் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்ட ஸ்ரிக்கரிகளும், பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam