மோப்ப நாய்களுடன் சோதனையில் இறங்கிய களுவாஞ்சிகுடி பொலிஸார்
மட்டக்களப்பு - பல்முனை பிரதான வீதியின் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நேற்றிரவு (18.01.2024) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோப்பநாய் உதவியுடன் சோதனை
இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளும் மோப்ப நாய்கள் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்ட ஸ்ரிக்கரிகளும், பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam