மாணவர்கள் மத்தியில் தூக்கமின்மை அதிகரிக்கும் அபாயம்
இலங்கையில் 63% மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமை கவலைகளை எழுப்புகிறது என சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே கூறியுள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குறித்த தகவலை வெளியிட்ட அவர், தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 - 17 வயதுடைய பாடசாலை மாணவர்களில் 8.2%மானோர், 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நேரத்தைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 6.6% மாணவிகளும் 16.4% மாணவர்களும், வாகன விபத்துக் காயங்கள் அல்லது மோட்டார் வாகனங்களால் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களால் பாதிப்பு
அத்துடன், வன்முறை மற்றும் தற்செயலான காயங்களில் 23.8% பேர் உடல் ரீதியான தாக்குதல்களையும், 6.1% பேர் பாலியல் துன்புறுத்தல்களையும், 6.9% பேர் இணைய பாலியல் துன்புறுத்தல்களையும், 34.5% பேர் உடல் ரீதியான சண்டைகளையும் எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

47.9% மாணவர்கள் ஆசிரியர்களால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதோடு கடந்த 12 மாதங்களில் 6.1% மாணவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட நிரப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆண்களிடையே இது அதிக சதவீதமாக பதிவாகியுள்ளது என்றும் சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri