மாணவர்கள் மத்தியில் தூக்கமின்மை அதிகரிக்கும் அபாயம்
இலங்கையில் 63% மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமை கவலைகளை எழுப்புகிறது என சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே கூறியுள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குறித்த தகவலை வெளியிட்ட அவர், தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 - 17 வயதுடைய பாடசாலை மாணவர்களில் 8.2%மானோர், 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நேரத்தைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 6.6% மாணவிகளும் 16.4% மாணவர்களும், வாகன விபத்துக் காயங்கள் அல்லது மோட்டார் வாகனங்களால் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களால் பாதிப்பு
அத்துடன், வன்முறை மற்றும் தற்செயலான காயங்களில் 23.8% பேர் உடல் ரீதியான தாக்குதல்களையும், 6.1% பேர் பாலியல் துன்புறுத்தல்களையும், 6.9% பேர் இணைய பாலியல் துன்புறுத்தல்களையும், 34.5% பேர் உடல் ரீதியான சண்டைகளையும் எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

47.9% மாணவர்கள் ஆசிரியர்களால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதோடு கடந்த 12 மாதங்களில் 6.1% மாணவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட நிரப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆண்களிடையே இது அதிக சதவீதமாக பதிவாகியுள்ளது என்றும் சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri